செய்திகள் :

சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குகன்பாறையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில், இரவு நேரக் காவலாளியாகத் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 60) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவருடன், மாற்றுக் காவலராக குகன்பாறையைச் சேர்ந்த கருப்பசாமி (55) என்பவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவலர் கருப்பசாமியை, பட்டாசு ஆலை உரிமையாளர் கேசவன் வேலையிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.

murder
murder

இந்த வேலை நீக்க நடவடிக்கைக்கு, தன்னுடன் பணியாற்றும் மாற்று காவலரான மோகன்ராஜ்தான் காரணம் எனக் கருப்பசாமி ஆத்திரம் அடைந்துள்ளார்.

இந்தநிலையில், பட்டாசு ஆலையில் பணி முடிந்து இரவு காவல் பணியில் மோகன்ராஜ் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, தூங்கிக்கொண்டிருந்த காவலர் மோகன்ராஜ் தலையின் மீது கல்லைத் தூக்கிப்போட்டுள்ளார்.

இதில் முகம் சிதைந்து மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை உறுதிபடுத்திவிட்டு கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், காலை வழக்கம்போல பட்டாசு ஆலை பணிக்குத் தொழிலாளர்கள் வந்தபோது காவலர் அறையில் மோகன்ராஜ் முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட காவாளி மோகன்ராஜ்
கொலை செய்யப்பட்ட காவாளி மோகன்ராஜ்

இதையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை போலீஸார், மோகன்ராஜ் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பான புகாரின்பேரில், கொலைசெய்து விட்டுத் தப்பி ஓடிய கருப்பசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு... மேலும் பார்க்க

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க

கேரளா: கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக் கேட்ட சிறுவனைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீபா கேரளா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார... மேலும் பார்க்க

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார... மேலும் பார்க்க