செய்திகள் :

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

post image

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள டிரைவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. முதல் வெட்டு விழுந்ததும் கண்விழித்த மணிகண்டன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் மர்ம கும்பல், சுற்றி வளைத்து மணிகண்டனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

 கொலை
கொலை

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் கிளாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர் மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக டிரைவர் மணிகண்டன் கொலை செய்யப்பட்டார் என போலீஸார் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்டமாக கொலை நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். அப்போது இந்தக் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சடலத்தை கல்லூரி வளாகத்துக்குள் கொண்டு செல்வோம் என கோஷமிட்டனர். அவர்களிடம் கிளாம்பாக்கம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனை கடித்த நாய் - விசாரணையில் இறங்கிய போலீஸ்

சென்னை போரூர் அருகே உள்ள சமயபுரம், ஸ்ரீராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மகன் மோனிஷ் (6). இவன் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மோனிஷ் திடீரென அலறினார்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: தலையை துண்டித்து பெண் படுகொலை; கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சண்முகசுந்தரம் கடந்த 2021-ல் இறந்து விட்டார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் வெடித்த மோதல்; அரிவாள் வெட்டு... குடிசைகளுக்கு தீ வைப்பு! - புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் நேற்று கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அந்த திருவிழாவின் ஒருபகுதியாக தேரோட்டமும் நடத்தப்பட்டது. அப்போது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர்... மேலும் பார்க்க

`நான் அப்ளை செய்திடறேன்' - நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட் தயாரித்துக் கொடுத்த இளம்பெண் கைது!

மருத்துவப் படிப்புக்கான தகுதித்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா அரசு மேனிலைப் பள்ளியில் நடந்த நீட் தேர்வு எழுத திருவனந்தபுரத்தை அடுத்த பாறசாலையைச் சேர்ந்த ஜி... மேலும் பார்க்க

`நடிக்க வாய்ப்பு; திருமணம்’ - நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண்

பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் நடிப்பில் சமீபத்தில் ஒ.டி.டி.யில் வெளியான `ஹவுஸ் அரஸ்ட்’ வெப்சீரியஸ் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஹவுஸ் அரஸ்ட் வெப் சீரியஸ் Ullu App என்ற செயலில் வெளியானது. அதில... மேலும் பார்க்க