பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!
ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!
சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,025 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது இன்று மாலை ரூ. 9,100 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று ஒரு சவரன் இன்று காலை ரூ.72,200 விற்கப்பட்ட நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்து ரூ.72,800 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.8,900 ஆகவும், ஒரு சவரன் ரூ.71,200 ஆகவும் விற்கப்பட்டது. இன்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்தது.
ஆனால் மாலையில் மட்டும் தங்கம் விலை ரூ. 600 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,600 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறி வருகின்றனர். வரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.