செய்திகள் :

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

post image

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,025 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது இன்று மாலை ரூ. 9,100 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று ஒரு சவரன் இன்று காலை ரூ.72,200 விற்கப்பட்ட நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்து ரூ.72,800 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.8,900 ஆகவும், ஒரு சவரன் ரூ.71,200 ஆகவும் விற்கப்பட்டது. இன்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்தது.

ஆனால் மாலையில் மட்டும் தங்கம் விலை ரூ. 600 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,600 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறி வருகின்றனர். வரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

22 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணியை அக்டோபருக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் 22 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான திட்டங்களை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். குறு, சிறு மற்ற... மேலும் பார்க்க

சித்ரா பௌர்ணமி : விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

விழுப்புரம்: சித்ரா பௌர்ணமியையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் மிதமான மழை!

தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்

சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மா... மேலும் பார்க்க

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க