செய்திகள் :

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு: பிரதமர் மோடி

post image

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ‘பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் தாம் தொலைபேசியில் பேசியிருப்பதாகவும், அதன்போது, வரலாற்றிலொரு மைல்கல்லாக இந்தியாவும் பிரிட்டனும் தொலைநோக்குடைய இருதரப்புக்கும் பரஸ்பர பயனளிக்கிற தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாக’ தெரிவித்திருக்கிறார்.

‘இதன்மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவும், வர்த்தகமும், முதலீடுகளும், வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும், புத்தாக்கங்களும் நமது பொருளாதாரத்தில் மேலும் ஊக்குவிக்கப்படும்’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தற்போது இரு நாடுகளிடையே சராசரியாக ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இதை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு அல்லது மூன்று மடங்காக உயா்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி

புது தில்லி: இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை... மேலும் பார்க்க

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஆஸி. பிரதமருக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயர் சூட்டப்படும்! முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அம்மாந... மேலும் பார்க்க

விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்றுக... மேலும் பார்க்க

ஹிந்துக்களின் பாதுகாப்பை மமதா உறுதி செய்யவில்லை: பாஜக

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி ஆட்சியில் ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என பாஜக விமர்சித்துள்ளது. மூர்ஷிதாபாத் பகுதியில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சென்று அவர் ... மேலும் பார்க்க

கழிப்பறை அடைப்பால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை அடைக்கப்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது. கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து தில்லி நோக்கி சுமார் 250 பயணி... மேலும் பார்க்க