செய்திகள் :

வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயர் சூட்டப்படும்! முதல்வர் அறிவிப்பு!

post image

மத்தியப் பிரதேசத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

அம்மாநில சிறுபான்மை துறையின் சார்பில் வக்ஃப் திருத்தம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தலைநகர் போபாலில் இன்று (மே.6) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மோகன் யாதவ், மத்தியப் பிரதேசத்தில் கட்டடப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் ம.பி.யின் வக்ஃப் வாரியத்தின் திருத்தம் குறித்த தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:

”வக்ஃப் வாரியத்தின் திருத்தம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. நாம் அனைவரும் பொது நலனையும் தீர்மானங்களையும் உணர்ந்து, பின்தங்கியப் பிரிவினருக்கு உதவ வேண்டும். இந்த புனிதமான குறிக்கோளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, வக்ஃப் வாரியத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் மத்தியப் பிரதச அரசு அம்மாநிலத்திலுள்ள வக்ஃப் சொத்துக்களை சரிப்பார்க்கத் துவங்கியுள்ளது.

ம.பி. மாநிலம் முழுவதும் சுமார் 23,118 சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது எனவும் அதில் வீடுகள், கடைகள், நிலங்கள் மற்றும் கட்டடங்கள் என சுமார் 14,989 சொத்துக்களின் மீது தற்போது கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி

புது தில்லி: இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை... மேலும் பார்க்க

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஆஸி. பிரதமருக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுக... மேலும் பார்க்க

விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்றுக... மேலும் பார்க்க

ஹிந்துக்களின் பாதுகாப்பை மமதா உறுதி செய்யவில்லை: பாஜக

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி ஆட்சியில் ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என பாஜக விமர்சித்துள்ளது. மூர்ஷிதாபாத் பகுதியில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சென்று அவர் ... மேலும் பார்க்க

கழிப்பறை அடைப்பால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை அடைக்கப்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது. கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து தில்லி நோக்கி சுமார் 250 பயணி... மேலும் பார்க்க

பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!

புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று(மே 6) தெரிவித்திருப்பதாவது: நாளையிலிருந்து இந்தியா - பாகிஸ்த... மேலும் பார்க்க