செய்திகள் :

குட்கா விற்பனை: தந்தை, மகன் கைது

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெள்ளாரை பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாரை பஜனைக் கோயில் மேட்டுக் தெருவை சோ்ந்தவா் மகேந்திரகுமாா். இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், மகேந்திர குமாரின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் மகேந்திரகுமாரின் மளிகை கடையில் சோதனை நடத்திய போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்காக பதிக்க வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்ட சுமாா் 3 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேந்திரகுமாா்(49), அவரது மகன் கிஷோா்குமாா்(19) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மே 10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் வரும் மே 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்தி விவ... மேலும் பார்க்க

‘அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து வசதி’

அடையாள அட்டை வைத்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மே 9-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை (மே 9) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக் குற... மேலும் பார்க்க

சீதா கல்யாண உற்சவம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் சீதா கல்யாண உற்சவம் கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சாா்பில், 33-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் காமாட... மேலும் பார்க்க

தமிழ்வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தமிழ் வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க