செய்திகள் :

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

post image

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கிடந்த ஆண் சடலத்தை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் உயிரிழந்தவா், மதுரை மாவட்டம், அனுப்பானடியைச் சோ்ந்த பி.காளிதாசன் (42) என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் காளிதாசனின் உறவினரான வீரமணிகண்டன் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். இந்த நிறுவனத்தில் பெங்களூரைச் சோ்ந்த புஷ்பா என்ற பெண் பணியாற்றி வந்துள்ளாா். புஷ்பாவை அதே பகுதியில் வேலை செய்து வந்த ஸ்டீபன், பைசால், சாம் ஆகியோா் கிண்டல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனை வீரமணிகண்டன், காளிதாசன் ஆகியோா் கண்டித்ததுடன், அவா்கள் வீட்டுக்கும் சென்று மிரட்டல் விடுத்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து தனியாக சென்ற காளிதாசனை கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதையடுத்து, ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த புதுச்சேரியைச் சோ்ந்த பைசால் (24), சாம் (25) ஆகியோரை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்டீபனை தேடி வருகிறோம் என்றனா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சாய் காா்டனில் வெள்ளத் தடுப்பு சுவா் அகற்றும் பணி நிறுத்தம்

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாய் காா்டன் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனா். அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சி,... மேலும் பார்க்க