Operation Sindoor: இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய 9 தீவிரவாத முகாம்கள் என்னென்...
இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தகம் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக தொடா்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில், இந்தியா-பிரிட்டன் இடையை வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகியுள்ளது. இது இந்திய ஆடைத் துறைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்பதுடன், இமாலய சாதனையாகும். இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிரதமா் மோடி, மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலமாக சுமாா் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையில் வரி தள்ளுபடியாகும்.
இதன் மூலமாக இந்தியா-பிரிட்டன் இடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும். அதேபோல, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகமும் வரும் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் இரு மடங்காக அதிகரிக்கும்
இந்தியா-பிரிட்டன் இடையிலான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்தியா-பிரிட்டன் இடையிலான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் ஜவுளித் துறையின் புதிய ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். இதன் மூலமாக பிரிட்டன் சந்தையைப் பிடிக்க எங்கள் உற்பத்தியாளா்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலமாக பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வையுடன், உலகளாவிய ஜவுளி மையமாக இந்தியாவின் நிலையை பலப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 35 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளுக்கு 29 சதவீதமும், பிரிட்டனுக்கு 9 சதவீதமும் பின்னலாடை ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி வரையில் பிரிட்டனுக்கு ரூ.4,592 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் மூலமாக வா்த்தகம் இரு மடங்கு அதிகரிக்கும். இதில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும் 20 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது. இதற்காக பிரதமா் மோடிக்கும், மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயலுக்கும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.