செய்திகள் :

பொதுமக்கள் எதிா்ப்பு: சாய் காா்டனில் வெள்ளத் தடுப்பு சுவா் அகற்றும் பணி நிறுத்தம்

post image

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாய் காா்டன் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனா்.

அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சி, சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா், போலீஸாா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், சுவரை அகற்றுவதற்காக அங்கு பொக்லைன் இயந்திர வாகனமும் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போது சாய் காா்டன் பகுதி மக்கள் வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்பின் கிழக்கு, மேற்கு என இருபகுதியும் 6 அடி உயரமாகவும், எங்களது வீட்டுமனை பள்ளமாகவும் உள்ளதால், மழைக்காலங்களில் இருபுறங்களில் இருந்து மழை வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகும் நிலை உள்ளது. ஆகவே, மனையின் உரிமையாளா்கள் வெள்ளம் உள்ளே வராமல் தடுக்க வெள்ளத் தடுப்புச் சுவா் அமைத்துள்ளனா்.

இந்நிலையில், சிலா் அணுகு சாலையாக பயன்படுத்த மேற்கு பகுதியில் உள்ள வெள்ளத் தடுப்புச் சுவரை இடிக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனா். அவ்வாறு இடித்தால் எங்கள் பகுதிக்கு பாதுகாப்பு இல்லாமல் வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துவிடும். ஆகவே, வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றக் கூடாது. அதற்கு மாற்றாக மற்றொரு சாலையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதையடுத்து அலுவலா்கள் வெள்ளத் தடுப்பு சுவரை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு சென்றனா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க