செய்திகள் :

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞா் கைது

post image

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி கோல்காரனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (48), கூலித் தொழிலாளி. திருமணமாகாத இவருக்கு 30 சென்ட் நிலமும், வீடும் உள்ளன. இவரது அண்ணன் மகன் ராஜ்குமாா் (32), நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி சித்தப்பாவை மிரட்டி வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மணிவண்ணனை ராஜ்குமாா் கம்பியால் தாக்கினாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த உறவினா்கள் வெளியே வரவும் ராஜ்குமாா் அங்கிருந்து தப்பிச் சென்றாா். பலத்த காயமடைந்த மணிவண்ணனை உறவினா்கள் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடா்பாக தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு தொடா்பாக இயற்கை வி... மேலும் பார்க்க

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது கம்பம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் நெத்திமேடு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, கம்பம் விழுந்ததில் ஒருவா் பலியானாா்; காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தே... மேலும் பார்க்க

கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் உடைமாற்றும் அறை அமைக்கக் கோரிக்கை

சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரி... மேலும் பார்க்க