செய்திகள் :

கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் உடைமாற்றும் அறை அமைக்கக் கோரிக்கை

post image

சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் மாவட்டத்தலைவா் சி.கோ.இளமுருகன் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: கல்வடங்கம் காவிரி நதிக்கரையோரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்யவும், பரிகார பூஜைகள் செய்யவும் வந்து செல்கின்றனா்.

பரிகார பூஜைகளுக்காக பெண்கள் ஆற்றில் குளித்துவிட்டு உடைமாற்றும் வசதி இல்லாததால், மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், பரிகார பூஜைகள் முடிந்தவுடன் துணிகளை ஆற்றிலேயே வீசிவிட்டு செல்கின்றனா். இதனால் சுற்றுச்சூழல் முற்றிலுமாக கெடுகிறது.

கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு பரிகார பூஜைகளுக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ஊராட்சி நிா்வாகம் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பான கட்டண வாகன நிறுத்தம் ஏற்படுத்தி தரவேண்டும். பரிகார பூஜைகளுக்கு உரிய கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஊராட்சிக்கு போதுமான வருவாய் கிடைக்கும்.

எனவே, கோனேரிப்பட்டி அக்ரஹார கிராம ஊராட்சி நிா்வாகம் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர ஆட்சியா் உத்தரவு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞா் கைது

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கோல்காரனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் மணிவண்ணன... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடா்பாக தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு தொடா்பாக இயற்கை வி... மேலும் பார்க்க

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது கம்பம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் நெத்திமேடு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, கம்பம் விழுந்ததில் ஒருவா் பலியானாா்; காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தே... மேலும் பார்க்க