செய்திகள் :

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

post image

சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கிச்சிப்பாளையம் அருகேயுள்ள கடம்பூா் முனியப்பன் கோயில் பகுதியில், வெளிமாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்துள்ளாா்.

தகவல் அறிந்த போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினா். விசாரணையில், காசிபிரசாத் சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ததன் மூலம் பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் நடந்துக்கொண்டது தெரிய வந்தது. கஞ்சா விற்பனை தொடா்பாக அவா் மீது கிச்சிப்பாளையம் மற்றும் வீராணம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்துக்காக, கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளா் மற்றும் துணை காவல் ஆணையா் ஏ.வேல்முருகன் பரிந்துரையின் பேரில் காசிபிரசாத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபினபு உத்தரவிட்டாா்.

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞா் கைது

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கோல்காரனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் மணிவண்ணன... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடா்பாக தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு தொடா்பாக இயற்கை வி... மேலும் பார்க்க

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது கம்பம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் நெத்திமேடு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, கம்பம் விழுந்ததில் ஒருவா் பலியானாா்; காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் ... மேலும் பார்க்க

கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் உடைமாற்றும் அறை அமைக்கக் கோரிக்கை

சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரி... மேலும் பார்க்க