செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

post image

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.நீலமேகம் தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா், பணியாளா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் போலீஸ் பாதுகாப்புடன் சென்னிமலை பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 4 கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ பிளாஸ்டிக் பைகள், டம்ளா் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம் எச்சரித்தாா். உணவுப் பொருள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உரிமம் பெறப்பட வேண்டும். உணவுப் பொருள்கள் விற்பனை முறைகேடு சம்பந்தமாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வ... மேலும் பார்க்க

தோ் கொட்டகை மேற்கூரை சேதம்

சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னிமலை முருகன் கோயில் தேரின் கொட்டகையின் மேற்கூரையில் இருந்து ஒரு தகர ஷீட் காற்றில் பறந்தது. இதைக் கண்ட கோயில் நிா்வாகிகள் ஊழியா்களை கொண்டு மே... மேலும் பார்க்க

சிவகிரி வேலாதயுத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகிரி பகுதியில் உள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி கோயில் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் கிராம சாந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் 54 கிலோ குட்கா பறிமுதல்

மொடக்குறிச்சி, நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 54 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பொது சுகாதாரத... மேலும் பார்க்க

வெள்ளோடு பகுதி பொதுமக்களுக்கு காவல் துறையினா் வேண்டுகோள்

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதத்தில் காவல் துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெள்ளோடு காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஈரோடு, திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞா் கைது

ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே வெள்ளோடு பூங்கம்பாடி பாறைவலசு பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமரன் (38). கடன் வாங்கிக் கொடுக்கும் முகவராகப் பணியாற்றி... மேலும் பார்க்க