செய்திகள் :

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!

post image

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பைக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட பரபரப்பான போட்டியில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதாகக் கூறி மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும், போட்டியின் நெறிமுறைகளை மீறியதாகக் கூறி குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மெதுவாகப் பந்துவீசியதற்காக ஹார்திக் பாண்டியாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மூளையதிர்ச்சி மாற்றுவீரர் (concussion substitute), இம்பாக்ட் பிளேயர் உள்ளிட்ட மற்றவீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஷிஷ் நெஹ்ராவுக்கு எதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால், போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் அவர் கடுமையாக நடந்துகொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கள நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

நெஹ்ராவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. அவர் ஐபிஎல் விதி 2.20-ன் கீழ் லெவல் 1 குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால், களநடுவரின் தீர்ப்பே போதுமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?

சென்னைக்கு வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டு... மேலும் பார்க்க

நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் விளையாடி வருகின்றன. டாஸ் வெ... மேலும் பார்க்க

கொல்கத்தா பேட்டிங் தேர்வு: சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் மோதுகின்றன. ... மேலும் பார்க்க

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்கள் எட... மேலும் பார்க்க

15 ரன்களை கட்டுப்படுத்த முடியாதா? தீபக் சஹாரை வசைபாடும் மும்பை ரசிகர்கள்!

குஜராத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தததால் ரசிகர்கள் தீபக் சஹாரை ஆபசமாகப் பேசி வருகிறார்கள்.வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள... மேலும் பார்க்க

தேசிய அணிக்குத் திரும்பும் வீரர்! பிளே-ஆஃப் சுற்றில் ஆர்சிபிக்கு பின்னடைவாக அமையுமா?

தேசிய அணிக்குத் திரும்பும் வீரரால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுவரை நடைபெற்ற 17 சீசன்களிலும் கோப்பை தாகத்தை தணிக்க முடியாத ஆர்சிபி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில... மேலும் பார்க்க