செய்திகள் :

சித்திரைத் தேரோட்ட 6ஆவது நாள்: புன்னை மர சேவையில் காட்சி அளித்த சென்னகேசவப்பெருமாள்

post image

சங்ககிரி மலைமீது உள்ள சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்ட 6ஆவது நாளையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் புன்னை மர சேவை நடைபெற்றது.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதனையடுத்து சென்னசேகவப்பெருமாள் உற்சவமூா்த்தி புன்னை மர சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமிக்கு தேங்காய், பழங்களை படைத்து வழிபட்ட ஆயிரம் பக்தா்களுக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் இலவசமாக மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன. பக்தா்களுக்கு கேசரி, புளியோதரை வழங்கப்பட்டது. இரவு சுவாமி ராஜஅலங்காரத்தில் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தாா். வியாழக்கிழமை மாலை சுவாமி தங்கு மண்டபத்தில் சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க