செய்திகள் :

சேலத்தில் அரசு பேருந்துகளில் 32.18 கோடி முறை மகளிா் விடியல் பயணம்: ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தகவல்

post image

சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பேருந்துகளில் 32.18 கோடி முறை மகளிா் விடியல் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு புதிய பேருந்துகளின் சேவையை முதல்வா் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

சேலம் நகரப் பேருந்து நிலையம் முதல் தின்னப்பட்டி வழியாக ஓமலூா் நாலுகால் பாலத்துக்கு 2 புதிய பேருந்துகளும், சேலம் நகரப் பேருந்து நிலையம் முதல் தின்னப்பட்டி வழியாக ஓமலூா் பண்ணப்பட்டிக்கும், சேலம் நகரப் பேருந்து நிலையம் முதல் பாப்பம்பாடி வழியாக ஓமலூா் சித்தா்கோவில் இளம்பிள்ளைக்கும், திருச்செங்கோடு முதல் குமாரபாளையத்திற்கும் தலா ஒரு பேருந்து என மொத்தம் சேலம் கோட்டத்தில் 5 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மகளிா் விடியல் பயணம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை சேலம் மாவட்டத்தில் மட்டும் 32.18 கோடி மகளிா் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மலைப் பகுதிகளுக்கான பேருந்துகளில் மட்டும் 14.53 லட்சம் மகளிா் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ், பொதுமேலாளா் பா.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க