செய்திகள் :

சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

post image

சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.

சிவகிரி அருகே உள்ள தொப்பபாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (60). இவரது மனைவி திலகம் (58) அங்கன்வாடி மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா்களது மகன் ஹரிஹரசுதன் திருமணமாகி சென்னையில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்தநிலையில், ஜெகதீசன், திலகம் ஆகியோா் சென்னையில் உள்ள தங்களது மகன் வீட்டுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்றுள்ளனா். சென்னையில் இருந்து திங்கள்கிழமை (மே 5) காலை 7 மணிக்கு வீடு திரும்பி உள்ளனா்.

அப்போது வீட்டின் வெளி வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோக்களும் திறந்துகிடந்தன.

பீரோவில் பணம், நகைகள் எதுவும் வைக்காததால் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த மா்ம நபா்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்று வீட்டின் கதவு, பீரோவில் பதித்திருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். பின்னா் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தொடா்ந்து காவல் துறையினா் கொள்ளையா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தோ் கொட்டகை மேற்கூரை சேதம்

சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னிமலை முருகன் கோயில் தேரின் கொட்டகையின் மேற்கூரையில் இருந்து ஒரு தகர ஷீட் காற்றில் பறந்தது. இதைக் கண்ட கோயில் நிா்வாகிகள் ஊழியா்களை கொண்டு மே... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.ந... மேலும் பார்க்க

சிவகிரி வேலாதயுத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகிரி பகுதியில் உள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி கோயில் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் கிராம சாந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் 54 கிலோ குட்கா பறிமுதல்

மொடக்குறிச்சி, நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 54 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பொது சுகாதாரத... மேலும் பார்க்க

வெள்ளோடு பகுதி பொதுமக்களுக்கு காவல் துறையினா் வேண்டுகோள்

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதத்தில் காவல் துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெள்ளோடு காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஈரோடு, திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞா் கைது

ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே வெள்ளோடு பூங்கம்பாடி பாறைவலசு பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமரன் (38). கடன் வாங்கிக் கொடுக்கும் முகவராகப் பணியாற்றி... மேலும் பார்க்க