செய்திகள் :

திருச்செந்தூர் கோயில் : `நிழல் விழாத முகூர்த்த நேரம்’ - குடமுழுக்கு நேரத்தை மாற்ற கோரிக்கை

post image

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது  திருச்செந்தூர், அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.  தினமும் நுற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா  மற்றும் விசேச நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்களும்  வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.  

இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து , 16 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். 

செய்தியாளர்களை சந்தித்த திரிசுதந்திரர்கள்

இக்கோயிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி நிதி மற்றும் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப்பணிகளுடன் கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் முழு வீச்சில்  நடந்து வருகிறது.

ஜூலை மாதம் 7-ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுவதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இக்கோயிலில் பணிபுரியும் திரிசுதந்திரர்கள், ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேக நேரத்தை மாற்றி, மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த  திரிசுதந்திரர்கள், ”திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.  இந்த நாளில் மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி ராஜகோபுர விமான கலசம், வள்ளி தெய்வானை, சண்முகர் விமானம் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி விமானங்களுக்கும் குடமுழுக்கு நடத்திட வேண்டும். நாங்கள் குறிப்பிடும் நேரம் என்பது நிழல் விழாத முகூர்த்த நேரம் ஆகும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

அந்த அபிஜித் முகூர்த்தத்தில் குடமுழுக்கு நடத்தினால் நாட்டிற்கும், ஆட்சியாளர்களுக்கும், நீதி பரிபாலனை செய்பவர்களுக்கும், மக்களுக்கும் நல்லது நடக்கும். கடந்த 1909-ம் ஆண்டு  மூலவர் பிரதிஷ்டை 12 மணிக்கு மேல் நடந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 2009-ம் ஆண்டு  காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதன் பிறகு பல இயற்கை சீற்றங்கள், மழை வெள்ளம், கொரோனா என பல பாதிப்புகள் எழுந்துள்ளது. எனவே இந்த முறை மதியம் 12 மணிக்கு மேல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு செய்திட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.

கஷ்டங்கள் எதுவானாலும் காக்கும் பெருங்களத்தூர் காமாட்சி அம்மன்; திருவிளக்கு பூஜை

2025 மே -16ம் தேதி சென்னை புது பெருங்களத்தூர் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவர... மேலும் பார்க்க

தீர்த்தவாரித் திருவிழா: முக்கோடி தேவதைகள் தீர்த்தமாடி, முன்னை வினை தீர்த்த திருக்கோடிக்கா!

முக்கோடித் தேவதைகள் தீர்த்தமாடி முன்னை வினை தீர்த்த திருக்கோடிக்கா! தீர்த்தவாரித் திருவிழா மற்றும் ரிஷபவாகனக் காட்சி சித்திரை 27, சனிக்கிழமை - 10.05.2025 திருக்கோடிக்காபொதுவாக திருத்தலங்களைத் தரிசிக்க... மேலும் பார்க்க

சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு; 2 நாள்கள் ஆன்லைன் முன்பதிவு ரத்து!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக தமிழ் மாதம் 1-ம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அப்போது பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.வைகாசி மாதத்திற்கான மாதாந்த... மேலும் பார்க்க

பங்குனி உத்திர திருவிழா: `மாணவர்கள் உள்பட 56 பேர் மீது வழக்கு' - அதிருப்தியில் 18 கிராம மக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு கோவிலுர் கிராமம். 18 கிராமங்களுக்கு தலைகிராமமான இந்த ஊரில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழ... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: நீண்ட ஆயுளும் நிறைவான ஆரோக்கியமும் நீங்காத செல்வமும் பெற சங்கல்பியுங்கள்

26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந... மேலும் பார்க்க

அஷ்ட லட்சுமியரும் சிவபூஜை செய்த தேரழுந்தூர் கோயில்; போனால் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்

தேரழுந்தூர் சிவாலய மஹா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 04.05.2025 - ஞாயிறு அன்று நிகழ்த்தப்பெற உள்ளது. அதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை சடங்குகள் முதலான நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க