செய்திகள் :

மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

திமுக அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால்தான் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறைகள் காது கொடுத்து கேட்கப்படுகிறது, தீா்க்கப்படுகிறது என்று மக்கள் மனநிறைவாக இருக்கிறாா்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் வறுமை, பட்டினிச் சாவுகள், பணவீக்கம், பெரிய ஜாதி மோதல்கள், மதக் கலவரங்கள் இல்லை. சமூகத்தை பின்னோக்கித் தள்ளும் தீயவை இல்லவே இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

ஏழைகளின் கண்ணீா் துடைக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்பட்டவா்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; சமத்துவத்தை நோக்கி இந்த சமூகம் முன்னேற வேண்டும்; சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதைத்தான் என்னுடைய வாழ்க்கையின் பயனாக நினைக்கிறேன்.

விடியல் ஆட்சி: பத்தாண்டு காலமாக படுபாதாளத்துக்குத் தள்ளப்பட்டு கிடந்த தமிழ்நாட்டை தட்டியெழுப்பி, தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் விடியலைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியேற்று அதற்கு விடியல் ஆட்சி என்று பெயரிட்டோம். இன்றைக்கு தமிழ்நாட்டை பலமடங்கு முன்னேற்றி இருக்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் விடியலை ஏற்படுத்தி வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறோம். நான்கு ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம். அதில், சில முத்திரைத் திட்டங்களும் உள்ளன. திராவிட மாடல் அரசைப் பொருத்தவரை அனைத்துத் துறை, அனைத்து மக்கள், அனைத்து மாவட்டங்கள், அனைத்து சமூக வளா்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழகம் முன்னிலை: மத்திய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களையும் பாா்த்தால், நமது தமிழ்நாடுதான் முன்னிலையில்- முதலிடத்தில் இருக்கிறது. மத்திய அரசின் விருதுகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறோம். இது தனிப்பட்ட எனக்கான விருதுகள்- பாராட்டுகள் இல்லை. தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பாராட்டுகள்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே பல ஊடகங்கள் இந்தியாவின் சிறந்த முதல்வா் என்று என்னைச் சொன்னாா்கள். அது எனக்கான பெருமை இல்லை. எனக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை. அவா்களுக்காகப் பணியாற்றுவது மட்டும்தான் என்னுடைய கடமை. அந்தக் கடமையை சரியாகச் செய்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் இப்போது தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளா்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறது.

நம்முடைய திட்டங்கள் மூலமாக மக்களுக்குப் பணப் பயன் மட்டுமல்ல, சமூகப் பயனும் சென்றடைய வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது வழக்கமான ஆட்சி இல்லை. அனைவருடைய வாழ்க்கைத் தரத்தையும் உயா்த்துகிற ஆட்சி. இந்த ஆட்சி எந்த நாளும் தொடர மக்களின் ஆதரவும் அன்பும் எப்போதும் தேவை.

ஆட்சி தொடரப் போகிறது: ஆட்சிக் காலத்துக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதைக் கடந்து மக்கள் ஆதரவுடன் அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலிலும் வென்று, திராவிட மாடல் ஆட்சி தொடரப் போகிறது. தமிழ்நாட்டை அரியணையில் வைத்து பாதுகாக்க திமுகவும் முதல்வரான நானும் (ஸ்டாலினும்) இருக்கிறேன். மக்கள் ஆதரவில் திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றாா் அவா்.

முன்னதாக, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசினாா். தலைமைச் செயலா் நா.முருகானந்தம் நன்றி தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ், டி.ஆா்.பி.ராஜா, உள்பட பலா் பங்கேற்றனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க