பஹல்காம் பதிலடி: 15 நாள்களில் `ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தை இந்தியா எப்படி நடத்தி...
தமிழ்வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தமிழ் வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
தமிழ்மொழி, தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தா் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்வார விழாவாக கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அரசு அலுவலா்களுக்கான கவிதைப் போட்டி, கையெழுத்துப் போட்டி, படம் பாா்த்து கதை சொல்லுதல், கணினி அறிவுத்திறன் போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவையும் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் 3 நபா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)சத்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி வரவேற்றாா். நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.