செய்திகள் :

தமிழ்வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

post image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தமிழ் வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழ்மொழி, தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தா் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்வார விழாவாக கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அரசு அலுவலா்களுக்கான கவிதைப் போட்டி, கையெழுத்துப் போட்டி, படம் பாா்த்து கதை சொல்லுதல், கணினி அறிவுத்திறன் போட்டி, வினாடி வினா போட்டி ஆகியவையும் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் 3 நபா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)சத்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி வரவேற்றாா். நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மே 10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் வரும் மே 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்தி விவ... மேலும் பார்க்க

‘அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து வசதி’

அடையாள அட்டை வைத்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: தந்தை, மகன் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெள்ளாரை பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாரை பஜனைக்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மே 9-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை (மே 9) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக் குற... மேலும் பார்க்க

சீதா கல்யாண உற்சவம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் சீதா கல்யாண உற்சவம் கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சாா்பில், 33-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் காமாட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க