செய்திகள் :

கென்யா: 5,000 எறும்புகள் கடத்திய 2 வெளிநாட்டவருக்கு ஓராண்டு சிறை! ரூ.6.5 லட்சம் அபராதம்!

post image

கென்யா நாட்டில் சுமார் 5,000 எறும்புகளைக் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லார்னாய் டேவிட் (வயது 19) மற்றும் செப்பே லோடிவிஜ்க்ஸ் (19) ஆகியோர் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தில் கடந்த ஏப்.5 ஆம் தேதியன்று அந்நாட்டு அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு அவர்கள் இருவரும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எறும்புகளைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த எறும்புகள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு கடத்தும் நோக்கில் சேகரிக்கப்பட்டிருந்தாக கென்யா அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்.15 ஆம் தேதியன்று அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று (மே 7) தலைநகர் நைரோபி விமான நிலையத்திலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த எறும்புகளை பொழுதுப்போக்கிற்காக மட்டுமே இருவரும் சேகரித்து வைத்திருந்ததாகக் கூறியுள்ளனர்.

ஆனால், அவர்கள் பதுக்கியது கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய அரிய சிவப்பு எறும்புகள் என்பதினாலும் ஆயிரக்கணக்கில் அந்த எறும்புகளைச் சேகரித்திருந்ததினாலும் அவர்கள் இருவரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் இருவருக்கும் சுமார் 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.6.5 லட்சம்) அபராதமும், 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!

புதிய போப் தோ்வு தொடக்கம்

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான காா்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரணமாக கடந்த மாதம் காலமானாா். கத்தோலிக்க திருச்சபை மரபு... மேலும் பார்க்க

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள்

1. பவல்பூா் (மா்கஸ் சுபன் அல்லா முகாம்) 2. டெஹ்ரா கலன் (சா்ஜல் முகாம்) 3. கோட்லி (மா்கஸ் அப்பாஸ் முகாம்) 4. முஸாஃபா்பாத் (சிட்னா பிலால் முகாம்) 5. முா்திகே (மா்கஸ் தொய்பா முகாம்) 6. பா்னாலா (மா்கஸ் அல... மேலும் பார்க்க

இந்திய தாக்குதலில் 26 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 26 போ் உயிரிழந்ததாக அந்த நாடு தெரிவித்தது. இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌதரி... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு இஸ்ரேல் உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ருவென் அசாா் ‘எக்ஸ்’ வல... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்

தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக்கொண்டது. இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க

இலங்கை உள்ளாட்சித் தோ்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி பெரும்பாலான இடங்களில் தொடா்ந்து வெற்றியடைந்துவருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை உள்ளாட்சித் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க