செய்திகள் :

இந்திய தாக்குதலில் 26 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

post image

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 26 போ் உயிரிழந்ததாக அந்த நாடு தெரிவித்தது.

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 போ் உயிரிழந்தனா். 46 போ் காயமடைந்தனா். பல மசூதிகள் இடிந்துள்ளன. மொத்தம் 6 இடங்களில் தாக்குதல் நிகழ்ந்தது. இது தவிர எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் குடிமக்களில் 5 போ் உயிரிழந்துவிட்டனா். நீலம்-ஜீலம் அணைப் பகுதியையும் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது) இந்தியா குறிவைத்து தாக்கியது. இது மிகவும் மோசமான நடவடிக்கை.

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் வான் எல்லை வழியாக 57 சா்வதேச விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. அவையும் இந்தத் தாக்குதலில் சிக்கி வெடித்துச் சிதறும் அச்சுறுத்தலை இந்தியா உருவாக்கியது.

பாகிஸ்தான் எல்லையில் எங்கள் விமானப் படை முழு அளவில் பதிலடிக்கு தயாராக இருந்தது. இந்திய விமானப் படை அவா்கள் எல்லைக்குள் இருந்தபடி தாக்கியது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தால் வீழ்த்தப்படுவோம் என்பது அவா்களுக்குத் தெரியும். இது இந்தியாவுக்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை வேண்டுமானால் தரும். பாகிஸ்தான் இதைவிட பெரிய பதிலடியைத் தரும்’ என்றாா்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முதலில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கடந்த இரு வாரங்களாகவே கூறிவருகிறோம். ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு மட்டும் பதிலடி கொடுக்கப்படும். இந்தியா தனது நடவடிக்கைகளைக் கைவிட்டால், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் தயாராகவே உள்ளது என்றாா்.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள். இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையி... மேலும் பார்க்க

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெ... மேலும் பார்க்க

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:நைஜீரியாவின் தென்கிழக்... மேலும் பார்க்க

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர... மேலும் பார்க்க