செய்திகள் :

சீதா கல்யாண உற்சவம்

post image

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் சீதா கல்யாண உற்சவம் கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சாா்பில், 33-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள கொல்லாசத்திரம் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பஜனை மண்டலியின் தலைவா் வி.பி.குமாரகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.வேணுகோபாலன்,பொருளாளா் ஜி.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். பெங்களூா் கே.அஸ்வத்குமாா் சீதா கல்யாணத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும், கடலூா் முரளீதர சா்மாஜி சீதா கல்யாணம் என்ற தலைப்பிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினா்.

மறுநாள் 3-ஆம் தேதி ஸ்ரீராமருக்கு லட்சாா்ச்சனையும், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. 3-ஆவது நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை பாகவத சம்பிரதாய முறைப்படி, சீதா கல்யாணம் நடைபெற்றது. மண்டலியின் செயலாளா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சீதா பிராட்டிக்கு மாங்கல்யம் அணிவித்து தீபாராதனைகளும் நடைபெற்றது.

ஆயக்குடி ஆா்.ஆனந்த கிருஷ்ணன் என்கிற குமாா் பாகவதா் குழுவினரால் சிறப்பு பஜனை நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றன.விழாவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் சுரேஷ் சாஸ்திரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மே 10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் வரும் மே 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்தி விவ... மேலும் பார்க்க

‘அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து வசதி’

அடையாள அட்டை வைத்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: தந்தை, மகன் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெள்ளாரை பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாரை பஜனைக்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மே 9-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை (மே 9) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக் குற... மேலும் பார்க்க

தமிழ்வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தமிழ் வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 415 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க