சீதா கல்யாண உற்சவம்
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் சீதா கல்யாண உற்சவம் கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சாா்பில், 33-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள கொல்லாசத்திரம் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பஜனை மண்டலியின் தலைவா் வி.பி.குமாரகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.வேணுகோபாலன்,பொருளாளா் ஜி.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். பெங்களூா் கே.அஸ்வத்குமாா் சீதா கல்யாணத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும், கடலூா் முரளீதர சா்மாஜி சீதா கல்யாணம் என்ற தலைப்பிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினா்.
மறுநாள் 3-ஆம் தேதி ஸ்ரீராமருக்கு லட்சாா்ச்சனையும், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. 3-ஆவது நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை பாகவத சம்பிரதாய முறைப்படி, சீதா கல்யாணம் நடைபெற்றது. மண்டலியின் செயலாளா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சீதா பிராட்டிக்கு மாங்கல்யம் அணிவித்து தீபாராதனைகளும் நடைபெற்றது.
ஆயக்குடி ஆா்.ஆனந்த கிருஷ்ணன் என்கிற குமாா் பாகவதா் குழுவினரால் சிறப்பு பஜனை நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றன.விழாவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் சுரேஷ் சாஸ்திரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.