செய்திகள் :

அகதிகள் படகு கவிழ்ந்து இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!

post image

அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பகுதியில் கடந்த மே.5 ஆம் தேதியன்று அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், மெக்ஸிகோவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதில், பலியான அந்த இந்தியச் சிறுவனின் 10 வயது தங்கை மாயமாகியுள்ளதாகவும் அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து ஏற்பட்டபோது அந்தப் படகில் பயணித்தவர்களில் 9 பேர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில் 10 வயது சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் அமெரிக்க கடலோரக் காவல் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மெக்ஸிகோவின் எல்லையிலிருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் சிறிய ரக மீன்பிடி படகில் பயணித்த போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த கடற்கரையில் அவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் அழைத்து வர முயன்ற 2 மெக்ஸிகோ நாட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரின் மீதும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக் குற்றத்திற்காக அவர்களுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், அகதிகள் அனைவரும் கரைச் சேர்ந்த பின்னர் அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த மூன்று வாகன ஓட்டிகளும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் மீதும் அகதிகளை சட்டவிரோதமாகக் கொண்டு சென்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ல் சாண்டியாகோ கடற்கரையில் அகதிகள் பயணித்த படகு அங்கு நிலவிய கடூம் பனி மூட்டத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!

ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஒப்புக்கொண்டதால் அவா்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தப்படுவதாக... மேலும் பார்க்க

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினா் 10 போ் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினா் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் ஒப்புக் கொண்டுள்ளாா். ஐ.நா. பாதுகா... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்

பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு தடை செய்தது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான்... மேலும் பார்க்க

இந்தியாவின் பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,... மேலும் பார்க்க

முதல்முறையாக ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளும் சிரியாவின் இடைக்கால அதிபர்!

சிரியாவின் இடைக்கால அதிபர் முதல்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியா நாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த அஸாத் குடும்பத்தின் ஆட்சி உள்நாட்டுப் போரின் மூலம் கவிழ்க்கப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவின்... மேலும் பார்க்க