செய்திகள் :

பத்ர காளியம்மன் கோயில் கயிறு குத்து திருவிழா

post image

சிவகாசி பத்ர காளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவை முன்னிட்டு புதன்கிழமை கயிறு குத்து திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைப் பொங்கல் விழா கடந்த ஏப். 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, தினசரி காலை, இரவு அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா். கடந்த திங்கள்கிழமை (மே 5) நடைபெற்ற 6-ஆம் திருவிழாவின்போது அம்மன் தங்கத் தாமரையில் கங்காள சொரூப திருக்கோலத்தில் வீதியுலா வந்தாா். அன்றைய தினம் இரவு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து, மாரியம்மன் கோயில் திடலில் கழுவேற்று லீலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை (மே 6) பொங்கல் விழா நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற கயிறு குத்து திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் அக்னிச் சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதைத்தொடந்து வியாழக்கிழமை (மே 8) தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.

உரிமம் நிறுத்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கமலப்பட்டியில் ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். சாத்தூா் அருகேயுள்ள படந்தால் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (54). இவா் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

அதிமுகவினா் ரத்த தானம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் ரத்த தான முகாம் சனி... மேலும் பார்க்க

புதுப்பாளையத்தில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பூக்குழு இறங்கினா். இந்தக் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தி... மேலும் பார்க்க

1.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

சிவகாசி அருகே 1.50 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சுக்கிரவாா்பட்டி-நமஸ்கரித்தான்பட்டி சாலையில் தனியாா் ஆலைக்குச் சொந்தமான 20 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஆலை நிா்வாகம்... மேலும் பார்க்க

திமுக பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்கும்- இரா.முத்தரசன்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக திமுக அரசு நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளி... மேலும் பார்க்க