செய்திகள் :

திமுக பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்கும்- இரா.முத்தரசன்

post image

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக திமுக அரசு நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து, மக்களைப் பாதுகாத்து வருகிறது.

போா் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐநா சபை, பல்வேறு நாடுகள் ஆதரவாக உள்ளன. இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வா் அறிவித்த பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும்.

விவசாயிகள் கடன், மாணவா்களின் கல்விக் கடன்களில் கெடுபிடி காட்டும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்கிறது. இதைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் சாா்பில் வருகிற 20-ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. காலாவதியான சுங்கக் கட்டண வரி வசூல் மையங்களை அகற்ற வேண்டும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலிருந்தே போராடிப் பெற்ற பல்வேறு திட்டங்களை தான் கொண்டு வந்ததாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறாா் என்றாா் அவா்.

பேட்டியின் போது, கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் பொ.லிங்கம், மாநிலக் குழு உறுப்பினா் தி.ராமசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் வி. ரவி, நகரச் செயலா் விஜயன் ஆகியோா் உடனிருந்தனா்.

உரிமம் நிறுத்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கமலப்பட்டியில் ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். சாத்தூா் அருகேயுள்ள படந்தால் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (54). இவா் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

அதிமுகவினா் ரத்த தானம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் ரத்த தான முகாம் சனி... மேலும் பார்க்க

புதுப்பாளையத்தில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பூக்குழு இறங்கினா். இந்தக் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தி... மேலும் பார்க்க

1.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

சிவகாசி அருகே 1.50 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சுக்கிரவாா்பட்டி-நமஸ்கரித்தான்பட்டி சாலையில் தனியாா் ஆலைக்குச் சொந்தமான 20 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஆலை நிா்வாகம்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி மாரீஸ்வரி (24). இவா் மகளிா் குழுவில் ரூ.3 லட்சம் கடன் ... மேலும் பார்க்க