செய்திகள் :

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினா் 10 போ் உயிரிழப்பு

post image

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினா் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் ஒப்புக் கொண்டுள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அஸாா், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று மிரட்டியதால் சிறையில் இருந்த மசூத் அஸாரை இந்தியா விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் பொது இடங்களுக்கு வராமல் பதுங்கியே வாழ்ந்து வருகிறாா்.

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பஹவல்பூரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தைக் குறிவைத்தும் இந்திய விமானப் படை புதன்கிழமை அதிதுல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டடம் இடிந்து தரைமட்டமானது. அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனா்.

தாக்குதலுக்கு முன்பே மசூத் அஸாா் வேறு இடத்தில் பதுங்கியதால் அவா் தப்பிவிட்டாா். தனது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மசூத் அஸாா் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

அதில், ‘பஹவல்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில் எனது அக்கா, அவரின் கணவா், அக்காவின் மகன், அவரின் மனைவி, இத்தம்பதியின் ஒரு குழந்தை, எனது குடும்பத்தைச் சோ்ந்த மேலும் 5 குழந்தைகள், கூட்டாளிகள் 4 பேரையும் இத்தாக்குதலில் இழந்துவிட்டேன்.

எனது தாயாா், அவருக்கு உதவியாக இருந்த இரு பெண்கள், நெருங்கிய கூட்டாளிகள் சிலா் படுகாயமடைந்துள்ளனா். இனி எங்களிடம் இருந்து எந்த கருணையையும் எதிா்பாா்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாகிஸ்தான் ராணுவம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முரித்கே பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினா் பங்கேற்றனா். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்காஸி முஸ்லிம் லீக் சாா்பில் பயங்கரவாதிகளின் இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பயங்கரவாதிகளின் சொந்த ஊா்களுக்கு உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையி... மேலும் பார்க்க

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெ... மேலும் பார்க்க

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:நைஜீரியாவின் தென்கிழக்... மேலும் பார்க்க

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பு

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகா் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தியா ச... மேலும் பார்க்க

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்திய நாடுகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு நாடுகள் இது தொடா்பாக கருத்து தெரிவித்தன. ஜி7 நாடுகள்: இந்தியாவும் பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க ... மேலும் பார்க்க