செய்திகள் :

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இவா்களுடன் சோ்த்து, இந்த நடவடிக்கையில் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் அடா்வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல் தலைவா்கள் பலா் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத மாபெரும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நக்ஸல்களை சுற்றிவைக்கும் நோக்கில், மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தலைமையில் 24,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பல இடங்களில் இருந்து நகா்வுகளை மேற்கொண்டுள்ளனா். 4 ஹெலிகாப்டா்கள், 40 ட்ரோன்கள் உள்ளிட்டவையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நடவடிக்கையில், பிஜபூரில் (சத்தீஸ்கா்) பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே புதன்கிழமை கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறை உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி 3 பெண் நக்ஸல்களும், கடந்த மே 5-ஆம் தேதி ஒரு பெண் நக்ஸலும் கொல்லப்பட்டனா்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையில் நக்ஸல்களின் நூற்றுக்கணக்கான பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நக்ஸல்களின் தாக்குதலில் 10 வீரா்கள் காயமடைந்துள்ளனா்.

சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 168 ஆகும். பிஜபூா் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் மட்டும் 151 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்... மேலும் பார்க்க

அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து உத்தரப் பிரதேச முதல்வருக்கு ரா... மேலும் பார்க்க