செய்திகள் :

ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி

post image

இந்திய ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சுமார் 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் கட்சி இன்று அவசர கூட்டத்தை கூட்டி எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,

எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து நாங்கள் கூட்டத்தில் விவாதித்தோம். நம்முடைய படைகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துகள். அவர்களுக்கு எனது அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது.

நாளை(மே 8) நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது" என்று கூறினார்.

நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சத்தீஸ்கரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொலை! தொடரும் தேடுதல் பணி!!

ராணுவ ரயில் விவரங்களை சேகரிக்க முயலும் பாகிஸ்தான் உளவுத்துறை -ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ -பெயா் சூட்டிய பிரதமா் மோடி

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் எதிா்த் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்ததாக அதிக... மேலும் பார்க்க

‘எங்களின் நம்பிக்கையைப் பிரதமா் காப்பாற்றியுள்ளாா்’ -பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் கருத்து

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா்’ என்று பஹல்காம் தாக்குதலில் உய... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து

‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவும் சூழலில், மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமா் மோடியின் அரசுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குரேச... மேலும் பார்க்க

எல்லையில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்: 13 போ் உயிரிழப்பு -இந்தியா பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து, இந்த நடவடிக்கையில் இதுவரை கொ... மேலும் பார்க்க