செய்திகள் :

இந்தியாவுக்கு உரிய பதிலடி -பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உறுதி

post image

பாகிஸ்தானின் காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுக்கும் நடவடிக்கை. இதற்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானில் 5 பகுதிகள் வரை இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மீது இந்தியா போா் தொடுத்துள்ளது. போரை விரும்பாத பாகிஸ்தான் மீது இந்தியா போரைத் திணித்துள்ளது. எனவே, அவா்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது.

எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தெரியும். எதிரிகள் தங்கள் வஞ்சக இலக்கை எட்ட பாகிஸ்தான் ராணுவம் அனுமதிக்காது என்றாா்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகும் இதே கருத்தைக் கூறிய ஷாபாஸ் ஷெரீஃப், ‘இந்தியாவுக்கு பதிலடி தர பாகிஸ்தான் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினாா்.

தாக்குதலை அடுத்து தலைநகா் இஸ்லாமாபாத், முக்கிய பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கருதப்படும் லாகூா் நகரின் வான் எல்லையை 48 மணி நேரத்துக்கு மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. 8 மணி நேரத்துக்குப் பிறகு இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்திய தூதரக அதிகாரியை அழைத்து கண்டனம்

இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தாக்குதலுக்காக தங்கள் தரப்பு கண்டனத்தைத் தெரிவித்தது. இந்தியாவின் இந்தத் தாக்குதலால் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துவிட்டனா் என்றும், இது பாகிஸ்தான் இறையாண்மை மீதான தாக்குதல் என்று அவரிடம் கூறப்பட்டது. இத்தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அவசரநிலையை அந்நாட்டு அமல்படுத்தியதால் பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள். இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையி... மேலும் பார்க்க

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெ... மேலும் பார்க்க

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:நைஜீரியாவின் தென்கிழக்... மேலும் பார்க்க

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர... மேலும் பார்க்க