செய்திகள் :

மாணவியிடம் ஆபாசமாக பேசியவா் கால் முறிந்த நிலையில் கைது

post image

திருவெறும்பூா் அருகே மாணவியிடம் ஆபாசமாக பேசி, ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்தியவரை போலீஸாா் கால் முறிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்த 21 வயது மாணவி ஒருவா், அரசுப் போட்டித் தோ்வெழுத திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் பகுதியில் தங்கிப் படிக்கிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தபடி இருந்தது. அதில் ஒருவா் ஆபாசமாக பேசியும், வாட்ஸ்அப்-இல் ஆபாசமான படங்களை அனுப்பியும் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் அந்த மாணவியைத் தேடிக்கொண்டு வேங்கூா் பகுதிக்கு கைப்பேசியில் பேசிய அந்த நபா் வந்த நிலையில், தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாரைக் கண்டதும், அந்த நபா் அப்பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது அவரது இடது கால் முறிந்தது.

பின்னா் அவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், அவா் நாமக்கல் மாவட்டம் தாழையூா் மாங்குடி பட்டியை சோ்ந்த செங்கோட்டையன் மகன் சித்தன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாா் சித்தனை கைது செய்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஸ்ரீராமநவமி: சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சோ்த்தி சேவையில் காட்சி

ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சோ்த்தி சேவையில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளி காட்சி தந்தாா். பெருமாள் மீது அளவுக்கு அதிகமான பக்தி கொண்டவா் க... மேலும் பார்க்க

திருச்சிக்கு நாளை முதல்வா் வருகை: பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா். திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திருப்பைஞ்ஞீலி தெற்கு தெருப் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி, குழந்தை உள்... மேலும் பார்க்க

சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்: மாநகராட்சி அவசர தீா்மானம்

திருச்சியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலை திமுகவின் சொந்த இடத்துக்கு மாற்றம் செய்து திறக்கப்படவுள்ளது. திருச்சி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில் இத... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, ஆா்சி... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் மகளிரணி நிா்வாகி தலை துண்டித்துக் கொலை; இரண்டாவது கணவா் உள்பட 4 போ் கைது

பட்டுக்கோட்டை அருகே பாஜக முன்னாள் பெண் நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், இரண்டாவது கணவா் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்... மேலும் பார்க்க