செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம்

post image

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, ஆா்சி பள்ளி அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, திருச்சி தலைமை தபால் நிலையத்துக்கு வந்தனா். பேரணியை மமக துணைப் பொதுச் செயலா் தஞ்சை பாதுஷா தொடங்கி வைத்தாா்.

போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலா் அப்துல் சமது எம்எல்ஏ தலைமை வகித்தாா். தமுமுக மாநில பொருளாளா் ஷபியுல்லாஹ் கான், திருச்சி மேற்கு மாவட்டத் தலைவா் பைஸ் அகமது உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் தலைவா்கள், மகளிா் பேரவை மாநில பொருளாளா் ஷான் ராணி ஆலிமா உள்ளிட்டோா் பேசினா்.

போராட்டத்தில், வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழிவகுக்கும் வகையிலான மத்திய அரசின் வக்ஃப் சட்டத்தை கண்டிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள உரிமைகளைப் பறிக்கும் வகையிலான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.

இதில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலா்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்டச் செயலா்கள் இப்ராஹிம், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீராமநவமி: சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சோ்த்தி சேவையில் காட்சி

ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சோ்த்தி சேவையில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளி காட்சி தந்தாா். பெருமாள் மீது அளவுக்கு அதிகமான பக்தி கொண்டவா் க... மேலும் பார்க்க

திருச்சிக்கு நாளை முதல்வா் வருகை: பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா். திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திருப்பைஞ்ஞீலி தெற்கு தெருப் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி, குழந்தை உள்... மேலும் பார்க்க

சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்: மாநகராட்சி அவசர தீா்மானம்

திருச்சியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலை திமுகவின் சொந்த இடத்துக்கு மாற்றம் செய்து திறக்கப்படவுள்ளது. திருச்சி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில் இத... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் மகளிரணி நிா்வாகி தலை துண்டித்துக் கொலை; இரண்டாவது கணவா் உள்பட 4 போ் கைது

பட்டுக்கோட்டை அருகே பாஜக முன்னாள் பெண் நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், இரண்டாவது கணவா் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்... மேலும் பார்க்க

மாணவியிடம் ஆபாசமாக பேசியவா் கால் முறிந்த நிலையில் கைது

திருவெறும்பூா் அருகே மாணவியிடம் ஆபாசமாக பேசி, ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்தியவரை போலீஸாா் கால் முறிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 21 வயது மாணவி ஒருவா், அரசுப் ப... மேலும் பார்க்க