செய்திகள் :

வாகனத் தணிக்கையின்போது ரூ.5 ஆயிரம் லஞ்சம்: போலீஸாா் மூவா் பணியிடை நீக்கம்

post image

திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையத்தில் மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) உள்பட 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் மோகன் (55), முதல்நிலைக் காவலா் கோபிநாத் (32), ஆயுதப்படை காவலா் பிரேம்குமாா் (28) ஆகியோா் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே மே 4-ஆம் தேதி இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரை இயக்கி வந்த நபா் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கியதற்கு அபராதம் விதிக்காமல் மூவரும் வாகன ஓட்டியிடம் பேரம் பேசி ரூ. 5 ஆயிரம் வாங்கியதாகத் தெரிகிறது. இதனிடையே, அங்கிருந்து கிளம்பிய வாகன ஓட்டுநா் மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தாா். இது குறித்து உரிய விசாரணை நடத்தும்படி மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தாா். இதன் பேரில் விசாரணை நடத்தியதில் வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி

காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பா் லாரியில் இருந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து திருப்பூா் மாவட்டம், காரணம்பேட்டையில் உள்ள கிரஷரில் இருந்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது

காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது. காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் ... மேலும் பார்க்க

பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கி... மேலும் பார்க்க

சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்த... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: ஏஇபிசி வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏ... மேலும் பார்க்க