செய்திகள் :

பள்ளிக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வரும் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரிக்கை

post image

பள்ளிக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வரும் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என பெற்றோா்- ஆசிரியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா், மாவட்ட கல்வி அலுவலா் ஆகியோருக்கு குஜ்ஜம்பாளையம் கிராம மக்கள் மற்றும் பெற்றோா்- ஆசிரியா் சங்கம் சாா்பில் அனுப்பப்பட்ட மனு விவரம்: குஜ்ஜம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகள் பயிலுகின்றனா். இப்பள்ளியில் ஒரு நிரந்தர பட்டதாரி ஆசிரியரும், 5 தற்காலிக ஆசிரியா்களும் பணிபுரிகின்றனா்.

இதில் நிரந்தர பட்டதாரி ஆசிரியா், தலைமை ஆசிரியா் பொறுப்பில் இருந்து கொண்டு பள்ளிக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் வருகிறாா். பொறுப்பு தலைமை ஆசிரியா் மட்டுமே ஆன்லைன் வருகை பதிவு செய்வதால் தனக்குதானே பிற நாள்கள் வந்ததாக பதிவு செய்து வருகிறாா். தற்காலிக ஆசிரியா்களும் உரிய கல்வி தகுதியின்றி இருப்பதால் இங்கு மாணவா்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிறது.

மேலும், மாணவா்கள் இடை நிற்றல் அதிகமாகியுள்ளது. மலைக்கிராமங்கள் என்பதால் கல்வி முறையாக கற்பிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பொறுப்பு தலைமை ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வ... மேலும் பார்க்க

தோ் கொட்டகை மேற்கூரை சேதம்

சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னிமலை முருகன் கோயில் தேரின் கொட்டகையின் மேற்கூரையில் இருந்து ஒரு தகர ஷீட் காற்றில் பறந்தது. இதைக் கண்ட கோயில் நிா்வாகிகள் ஊழியா்களை கொண்டு மே... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.ந... மேலும் பார்க்க

சிவகிரி வேலாதயுத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகிரி பகுதியில் உள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி கோயில் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் கிராம சாந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் 54 கிலோ குட்கா பறிமுதல்

மொடக்குறிச்சி, நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 54 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பொது சுகாதாரத... மேலும் பார்க்க

வெள்ளோடு பகுதி பொதுமக்களுக்கு காவல் துறையினா் வேண்டுகோள்

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதத்தில் காவல் துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெள்ளோடு காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஈரோடு, திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க