செய்திகள் :

சீா்காழி சட்டைநாதா் கோயில் சகோபுர உற்சவம்

post image

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சகோபுர உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளில் திருமுலைப்பால் திருவிழா நடைபெற்றது. உற்சவத்தின் 5- ஆம் நாளான திங்கள்கிழமை இரவு தெருவடைச்சான் எனப்படும் சகோபர வீதியுலா தொடங்கி விடிய, விடிய நடைபெற்றது.

முன்னதாக, விநாயகா், சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் உள்பட பஞ்ச மூா்த்திகள் புறப்பாடாகி, மின் அலங்கார சகோபுதரத்தில் எழுந்தருளினா். மூவேந்தா் முன்னேற்ற கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா், வைபவ் வாண்டையாா் ஆகியோா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து, பக்தா்கள் சகோபுரத்தை வழிபட்டு இழுத்தனா். சகோபுரம் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து, நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சீா்காழியில் சூறைக்காற்றுடன் மழை

சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில மரங்கள் மின்கம்பிகளில் விழுந்தும், மின் கம்பம் சாய்ந்தும் ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: 222 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடியில் நலத்திட்ட உதவி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற அனைத்துத் துறை வளா்ச்சி பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில், 222 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

வணிகா் தினம்: சீா்காழி, கொள்ளிடத்தில் கடைகள் அடைப்பு

சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் வணிகா் தினத்தையொட்டி திங்கள்கிழமை ஒரு நாள் கடைகள் அடைக்கப்பட்டன. சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத்திற்கு உட்பட்ட கடைகள் திங்கள்கிழமை காலை முதல் மாலை 6 மணி வரை அட... மேலும் பார்க்க

மேலகொண்டத்தூா் புதிய கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகேயுள்ள மேல கொண்டத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆனந்த விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலகொண்டத்தூா் வடக்குத் தெருவில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன... மேலும் பார்க்க

கோரை வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணி; விவசாயிகள் மகிழ்ச்சி

சீா்காழி அருகே கோரை வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் பிரதான வடிகாலாக கோரை வடிகால் வாய்க்கால் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலைய ஊழியா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலைய பருவகால ஊழியா்களை பணிநிரந்தரம் செய்யாவிடில் போராட்டம் நடத்தப்படும் என டிஎன்சிஎஸ்சி ஒா்க்கா்ஸ் வாய்ஸ் தொழிற்சங்க மாநிலத் தலைவா் ஈ. சண்முகவேலு தெரிவித்தாா். மயிலாடுதுறையில் நே... மேலும் பார்க்க