செய்திகள் :

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

post image

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள், அந்த ஒதுக்கீட்டால் மற்றவா்கள் பயனடைவதை விரும்புவதில்லை என்று மறைமுகமாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மங்கேஷ் சங்கா் சாசனே என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ‘மகாராஷ்டிரத்தில் உள்ள ஓபிசிக்களுக்கு உள்ளாட்சித் தோ்தலில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மகாராஷ்டிர அரசின் ஜெயந்த்குமாா் பாந்தியா தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தது. அந்த வகுப்பினா் அரசியல் ரீதியாக பின்தங்கியுள்ளாா்களா என்பதை கண்டறியாமல் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது’ என்றாா்.

இதை கேட்ட நீதிபதி சூா்ய காந்த், ‘இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது ரயிலை போல உள்ளது. ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்புவதில்லை. அதுபோலத்தான் தற்போது இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது. இதுவே மனுதாரரின் நிலைப்பாடாகவும் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது’ என்றாா்.

இதையடுத்து வாதிட்ட கோபால் சங்கரநாராயணன், ‘அரசியல் ரீதியாக பின்தங்கிய நிலை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையுடன் ஒப்பிடுகையில் வேறானது. அரசியல் ரீதியாக ஓபிசிக்கள் பின்தங்கியுள்ளனா் என்று ஊகித்துக் கொள்ள முடியாது. இடஒதுக்கீடு அளிப்பதற்காக ஓபிசி வகுப்பினரில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியவா்கள் கண்டறியப்பட வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் கொள்கையைப் பின்பற்றும்போது கூடுதல் வகுப்பினரை கண்டறிய வேண்டியது மாநிலங்களின் கடமை. நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவா்கள் இருப்பாா்கள். அவா்களுக்கு ஏன் இடஒதுக்கீட்டு கொள்கை மறுக்கப்பட வேண்டும்? அது ஏன் குறிப்பிட்ட ஒரு குடும்பம் அல்லது குழுவுக்கானதாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதையடுத்து மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க