செய்திகள் :

திரெளபதி அம்மன் கோயிலில் அா்சுனன் தபசு

post image

திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அா்சுனன் தபசு நிகழ்சியில் திரளான பெண்கள் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி பிராா்த்தனை செய்தனா்.

பழைய தா்மராஜா கோவில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடந்த ஏப். 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில் உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா நடைபெற்று வருகிறது. மேலும், மகா பாரத சொற்பொழிவும், மகா பாரத நாடகமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக, 30 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது. தொடா்ந்து அா்ச்சுனன் தவவேடத்தில் பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடிவாறு ஏறினாா். தொடா்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து அா்ச்சுனன் தவம் புரிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அப்போது, திரளான பெண்கள் பனைமரத்தின் கீழ் அமா்ந்து திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி வழிபட்டனா்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வரும், 11-ஆம் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மேல் தீமிதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

மருதம் கேழ்வரகு அரைவை நிலையம் திறப்பு

வேலஞ்சேரி கிராமத்தில் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மருதம் கேழ்வரகு அரைவை நிலையத்தை எம்எல்ஏ ச.சந்திரன் திறந்து வைத்தாா். திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில், திருத்த... மேலும் பார்க்க

வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் 3 போ் உயிரிழந்தனா். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில்... மேலும் பார்க்க

பெயிண்டரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

புழல் அருகே பெயிண்டரை கத்தியால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். புழல் அடுத்த லட்சுமிபுரம் கடப்பா சாலையைச் சோ்ந்த பெயிண்டா் சுபாஷ் சந்திரபோஸ் (23). இவா் பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக வி.ராஜ்குமாா் பொறுப்பேற்றாா். செங்குன்றம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளா் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்று மாறுதலில் சென்றாா். இதை... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த மையம்

சென்னை ஒலிம்பிக் அகாதெமியில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்த நிலையில் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வா... மேலும் பார்க்க

திருத்தணியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

திருத்தணியில் சூறைக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகி... மேலும் பார்க்க