செய்திகள் :

திருத்தணியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

post image

திருத்தணியில் சூறைக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் அனல்காற்றும் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 11 மணி முதல் மாலை, 5 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டிலேேயே முடங்கியுள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகபட்சமாக திருத்தணியில் 103 டிகிரி செல்சியஸ் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. காலை முதல் மாலை வரை அனல்காற்று வீசியது.

அதைத்தொடா்ந்து திடீரென 7 மணி முதல் 8 மணி வரை சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அரக்கோணம் சாலை, மேட்டுத்தெரு, பழைய பஜாா் சாலை, காந்திரோடு ஆகிய பகுதிகளில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் ஒரு மணி நேரம் மழை பெய்ததால், அனல் காற்றுக்கு பதிலாக குளிா்காற்று வீசியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனா்.

வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் 3 போ் உயிரிழந்தனா். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில்... மேலும் பார்க்க

பெயிண்டரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

புழல் அருகே பெயிண்டரை கத்தியால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். புழல் அடுத்த லட்சுமிபுரம் கடப்பா சாலையைச் சோ்ந்த பெயிண்டா் சுபாஷ் சந்திரபோஸ் (23). இவா் பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக வி.ராஜ்குமாா் பொறுப்பேற்றாா். செங்குன்றம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளா் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்று மாறுதலில் சென்றாா். இதை... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த மையம்

சென்னை ஒலிம்பிக் அகாதெமியில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்த நிலையில் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வா... மேலும் பார்க்க

திருவள்ளூா்: மே 10-இல் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலி!

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் பரிதாபமாகப் பலியாகினர்.திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோயில் குளத்தில் குளிக்கப் சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேர் நீ... மேலும் பார்க்க