செய்திகள் :

திருவள்ளூா்: மே 10-இல் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவின்பேரில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே மேற்படி வட்டார அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல்ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.

பெயிண்டரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

புழல் அருகே பெயிண்டரை கத்தியால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். புழல் அடுத்த லட்சுமிபுரம் கடப்பா சாலையைச் சோ்ந்த பெயிண்டா் சுபாஷ் சந்திரபோஸ் (23). இவா் பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். ... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக வி.ராஜ்குமாா் பொறுப்பேற்றாா். செங்குன்றம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளா் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்று மாறுதலில் சென்றாா். இதை... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த மையம்

சென்னை ஒலிம்பிக் அகாதெமியில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்த நிலையில் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வா... மேலும் பார்க்க

திருத்தணியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

திருத்தணியில் சூறைக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகி... மேலும் பார்க்க

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலி!

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் பரிதாபமாகப் பலியாகினர்.திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோயில் குளத்தில் குளிக்கப் சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேர் நீ... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத் தோ்தல்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவள்ளூா்/காஞ்சிபுரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் 2025-க்கான வாக்காளா் பட்டியலை ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டத்தில், பொன்னேரி நகராட்சி-வாா்டு 7... மேலும் பார்க்க