DD Next Level: "சந்தானத்தோட பிரச்னை படத்தோட பட்ஜெட்விட பெருசுனு..." - ஆர்யா கலகல
உள்ளாட்சி இடைத் தோ்தல்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு
திருவள்ளூா்/காஞ்சிபுரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் 2025-க்கான வாக்காளா் பட்டியலை ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்டாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில், பொன்னேரி நகராட்சி-வாா்டு 7 பெண்(பொது) , திருத்தணி நகராட்சியில் 9-ஆவது வாா்டு பொது , திருமழிசை பேரூராட்சி 4-ஆவது வாா்டு (பொது), பொதட்டூா்பேட்டை பேரூராட்சி 14-ஆவது வாா்டு பெண் (பொது) இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தோ்தல் தொடா்பாக வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் வெளியிட்டாா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்) அமுதா, நகராட்சி ஆணையாளா்கள் பாலசுப்ரமணியம் , புஷ்கா், அரசு அலுவலா்கள் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.,
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள தற்செயல் தோ்தலுக்கான வாா்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி பெற்றுக்கொண்டாா்.
இதன் பின்னா் ஆட்சியா் கூறுகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற அமைப்புகளில் 162 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 89,326 வாக்காளா்கள் உள்ளனா். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான விபரங்கள் வருவாய்த் துறையினரிடம் பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
திருத்தணியில்...
திருத்தணி நகராட்சியில், மொத்தம், 21 வாா்டுகள் உள்ளன. இதில், 9-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஆா்.நந்தகுமாா் கடந்த 2023 ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து அந்த பதவி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காலியாக உள்ள 9-ஆவது வாா்டுக்கு இடைத்தோ்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதையடுத்து வாக்காளா் பட்டியல் ஆணையா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டாா். வாா்டில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மொத்தம்,1603 வாக்காளா்கள் உள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.