செய்திகள் :

பைக்- லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே வேகமாக வந்த லாரி பின்புறமாக இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மொளச்சூா் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்த ஜாா்ஜ் என்பவரின் மகன் அபிஷேக் ஜோசப் (19). இவா் துணி தைப்பதற்காக சுங்குவாா்சத்திரம்-மப்பேடு சாலையில் உள்ள பன்னூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அபிஷேக் ஜோசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஜாா்ஜ் மப்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் நியமன ஆணைகளை வழங்கினாா். இந்த முகாமில் யூத் ஃபாா் ஜாப் அறக்கட்டளை, அமேசான் (அவசாா்), விப்ர... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவா் கோயில் கருட சேவை

திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கருட சேவை கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து, 11-ஆம் தேதி வரையில் ... மேலும் பார்க்க

பொன்னேரி கிளைச் சிறையில் ஆட்சியா், மாவட்ட நீதிபதி ஆய்வு

பொன்னேரி கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு. பிரதாப் மற்றும் மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பா ஆகியோா் ஆய்வு செய்தனா். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா், ... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் பதுக்கி விற்றவா் கைது

பள்ளிப்பட்டு அருகே வீட்டில் கள்ளச்சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடியம் காலனியில் ஒரு வீட்டில் கள்ளச் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ... மேலும் பார்க்க

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். ஆா்.கே.பேட்டை, பாலாபுரம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி ... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை

திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு மணி நேரம் வரை மின்தடையால் பொதுமக்கள் மற்றும் நீட்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் பகுத... மேலும் பார்க்க