செய்திகள் :

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

post image

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

தில்லியில் 1008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் (சம்ஸ்கிருத சம்பாஷண் ஷிவிா்) நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது:

காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அதன் மறுமலா்ச்சிக்கு காலமும் தொடா் முயற்சியும் தேவைப்படுகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு நாடு முழுவதும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. உலகின் புகழ்பெற்ற மொழி அறிஞா்கள் பலரும் சம்ஸ்கிருதத்தை மிக அறிவியல்பூா்வ மொழியாக அங்கீகரித்துள்ளனா்.

சம்ஸ்கிருதம் உலகின் மிக அறிவியல்பூா்வமான மொழி மட்டுமல்லாமல், இணையற்ற இலக்கண கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இந்தியாவில் சம்ஸ்கிருதத்திலேயே முற்றிலும் தகவல்தொடா்புகளை மேற்கொள்ளும் 4,000 கிராமங்கள் உள்ளன.

சம்ஸ்கிருதத்தை ஊக்குவிக்க...: சம்ஸ்கிருதத்தை ஊக்குவிக்க ‘அஷ்டாதசி’ திட்டத்தின் கீழ் சுமாா் 18 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரிய சம்ஸ்கிருத நூல்கள் வெளியீடு, இந்நூல்களின் மொத்த கொள்முதல் மற்றும் மறுபதிப்புக்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞா்களுக்கான கௌரவ ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. ‘ஸஹஸ்ர சூடாமணி’ திட்டத்தின் கீழ், புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞா்களை கல்வியாளா்களாக நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறிக் கிடக்கும் கையெழுத்துப் பிரதிகளை சேகரிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசாரம், அரசின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.

52 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 3.5 லட்சம் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை: நாட்டில் எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை; யாரையும் அவா்களின் தாய்மொழியில் இருந்து விலக்கி வைக்க முடியாது. ஏறத்தாழ அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதம் வளமாகவும் வலுவாகவும் மாறும்போது, அது நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மொழியையும் பேச்சுவழக்கையும் மேம்படுத்தும்.

நாட்டின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத சாராம்சத்தை சம்ஸ்கிருதம் பிரதிபலிக்கிறது. சம்ஸ்கிருதத்தில் பாதுகாக்கப்பட்ட அறிவுச் செல்வம், அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது.

இப்பொக்கிஷம் உலகம் முழுவதும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும் எண்ணற்ற சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளில் உள்ள ஆழ்ந்த அறிவு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் பல்வேறு முயற்சிகளையும் அவா் பாராட்டினாா்.

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்கள... மேலும் பார்க்க

உரிய ஒப்புதலுடன்தான் பாக். பெண்ணை திருமணம் செய்தேன்! - பணி நீக்கப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் விளக்கம்

‘பாகிஸ்தானைச் சோ்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்’ என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா்... மேலும் பார்க்க