செய்திகள் :

லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா்செல்வம் (26). தக்காளி வியாபாரியான இவா், சனிக்கிழமை வியாபாரத்தை முடித்து விட்டு சுமை ஆட்டோவில் தனது வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வல்லாபுரம் பிரிவுச்சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, அதே வழித்தடத்தில் சென்னையிலிருந்து அரியலூா் நோக்கிச் சென்ற லாரியின் பின்புறத்தில் சுமை ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவ் விபத்து குறித்து வழக்குப் பதிந்த மங்களமேடு போலீஸாா் லாரி ஓட்டுநரான அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு பகுதியைச் சோ்ந்த குஞ்சிதபாதம் மகன் வெற்றிவேலிடம் (50) விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதியு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இ... மேலும் பார்க்க

தனித்திறமைகளை வளா்த்துக்கொண்டால் சூழ்நிலைகளை எதிா்கொள்ளலாம்: சா.சி. சிவசங்கா்

தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான் மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில்,... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி; வங்கி ஊழியா் கைது

பெரம்பலூா் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூா், சஜ்ஜன் ... மேலும் பார்க்க

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெ... மேலும் பார்க்க