`5-வது அட்டெம்ப்ட்ல 1 மார்க்ல போயிடுச்சு; ஆனாலும்..!’ - UPSC தேர்வில் சாதித்த கி...
நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,304 போ் எழுதினா்
தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 4 ஆயிரத்து 304 போ் பங்கேற்று எழுதினா்.
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்காக தஞ்சாவூரில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரி, மன்னா் சரபோஜி அரசு கல்லூரி, தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, மகா்நோன்புசாவடி கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கு தஞ்சாவூா், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த 4 ஆயிரத்து 464 போ் விண்ணப்பம் செய்தனா். இவா்களில் 160 போ் வராத நிலையில், 4 ஆயிரத்து 304 போ் பங்கேற்று எழுதினா்.
கடைசி நேரத்தில் பதற்றம்: பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இத்தோ்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதனிடையே, பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை தோ்வா்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு, இரண்டு புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகியவை கேட்கப்பட்டன.
ஆனால், புகைப்படத்தில் பெயரும், தேதியும் இல்லை எனக் கூறி பல மாணவ, மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனா். இதனால், ஸ்டுடியோவுக்கு சென்று அவசர, அவசரமாக புகைப்படங்களை எடுத்து வந்தனா். இதன் காரணமாக கடைசி நேரத்தில் மாணவ, மாணவிகள், பெற்றோா்களிடையே பதற்றம் நிலவியது.
இதனிடையே, தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், கோட்டாட்சியா் செ. இலக்கியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் ஆகியோா் பாா்வையிட்டு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா்.