செய்திகள் :

கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

post image

மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26), ஃபாத்தில்(27) ஆகிய இருவரும் முறையான அனுமதி பெற்று ஞாயிற்றுக்கிழமை காலை மலையேற்றத்தில் ஈடுபட்டனர். உடன் மலைப்பாதை வழிகாட்டிகளும் இருந்தனர்.

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளை- 4 பேர் கைது

பின்னர் அவர்கள் மாலை 4.30 மணியளவில் மலை அடிவாரத்துக்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நீரிழப்பு காரணமாக அஜ்சல் மயக்கமடைந்தார். உடனே அவர் வேட்டைக்காரன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

வனத்துறையினர் அஜ்சலின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, ஆனைமலை போலீசில் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில், பலியான அஜ்சல் சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொண்ட வந்தது தெரியவந்தது. அஜ்சலின் உடற்கூராய்வு திங்கள்கிழமை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜான்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தற்போது வரவிருக்கும் நாள்கள் எப்படியிருக்கும் என்... மேலும் பார்க்க

11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தமையம் வெளியிட்ட தகவலில், தென்தமிழகம் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

அக்னி நட்சத்திரம் தொடங்கியது! வெளியானது மழைப்பொழிவு நிலவரம்!!

சென்னை: வெய்யில் இப்படி கொளுத்துகிறதே என்று புலம்பிவந்த தமிழக மக்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்று தெரிந்தபோதே வெப்பத்துக்கு இணையாக அச்சமும் அதிகரித்தது.இதோ அதோ என்று சொல்லிவந்த அக்னி நட்ச... மேலும் பார்க்க

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு மே 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி... மேலும் பார்க்க

வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் எழுதுகிறார்கள்: சீமான்

வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் எழுதுகிறார்கள் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து தாம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியி... மேலும் பார்க்க

மதுரையில் கூடிய தொண்டர்கள்: தவெக கட்சியினர் மீது வழக்குப்பதிவு!

தவெக தலைவர் விஜய் வந்தபோது மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தவெக தலைவர் விஜய், 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் செல்வதற்காக கடந்த... மேலும் பார்க்க