செய்திகள் :

சம்பித் பத்ரா மணிப்பூர் பயணம்: எம்எல்ஏக்களுடன் முக்கிய சந்திப்பு!

post image

பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளர் சம்பித் பத்ரா திங்கள்கிழமை மணிப்பூர் வந்து மெய்தி, குகி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இம்பால் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பத்ரா ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூருக்குச் சென்றார். அங்கு அவர் குகி அமைப்புகளின் தலைவர்களையும் மாவட்டத்தில் உள்ள பாஜக எம்எல்ஏக்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பித் பத்ராவை பாஜக மணிப்பூர் பொதுச் செயலாளர் கே. சரத் குமார் வரவேற்றார்.

மணிப்பூர் மாநிலத்திற்கு 21 எம்எல்ஏக்கள் தனித்தனியாகக் கடிதங்கள் எழுதி, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள வடகிழக்கு மாநிலத்தில் அமைதி, இயல்பு நிலையை உறுதி செய்வதற்காக "மக்கள் அரசை" அமைக்க வலியுறுத்தினர்.

அதே வேண்டுகோள் அடங்கிய கடிதங்களில், 13 பாஜக எம்எல்ஏக்கள், 3 என்பிபி சட்டப்பேரவை உறுப்பினர்கள், 3 நாகா மக்கள் முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இந்த கடிதங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு ஏப்ரல் 29 அன்று தனித்தனியாகக் கிடைத்தன.

மணிப்பூரில் அமைதியையும் இயல்புநிலையையும் கொண்டுவருவதற்கான ஒரே வழி மக்கள் அரசை அமைப்பதுதான் என்று நாங்கள் கருதுகிறோம் என்று எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

சூரசந்த்பூருக்கு சென்ற பத்ரா, இம்பாலில் உள்ள பாஜக எம்எல்ஏக்களை சந்திக்கவுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் பத்ரா கடைசியாக மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார்.

என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை இந்த தலைமை ஆட்சியமைக்கும்

கடந்த மே 2023 முதல் மணிப்பூரில் மெய்தி, குகி சமூகங்களுக்கு இடையேயான இன வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தமிழக மீனவர்களைக் காக்க நடவடிக்கை: பவன் கல்யாண் வேண்டுகோள்!

தமிழக மீனவர்கள் இன்னலகள் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்... மேலும் பார்க்க

சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்தியா, பிரிட்ட... மேலும் பார்க்க

ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே வழக்கமா? அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம்

புது தில்லி: போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொள்வது இது ஒன்றும் புதிதல்ல..... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் பேசிய புதின்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து... மேலும் பார்க்க