செய்திகள் :

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!

post image

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி இந்தியா, பிரிட்டன் என இரண்டு குடியுரிமைகளை வைத்திருப்பதாகவும், இந்தக் குற்றச்சாட்டில் அவரின் எம்பி பதவியைப் பறிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர் என்றும் கூறி கர்நாடக பாஜகவை சேர்ந்த எஸ். விக்னேஷ் சிசிர் பொதுநல வழக்குத் தொடுத்திருந்தார்.

முன்னதாக ராகுல் காந்திக்கு எதிராக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை குறித்து தனது கடைசி விசாரணையில் அலாகாபாத் நீதிமன்றம் அதிருப்தியைத் தெரிவித்தது. மேலும் ராகுலின் குடியுரிமை குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்துத் திருத்தப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம் அளித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்ததன் அடிப்படையில், இந்து வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு லக்னௌ அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்பிறகு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான், ராஜீவ் சிங் ஆகியோர் அடங்கிய லக்னௌ அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களைக் காக்க நடவடிக்கை: பவன் கல்யாண் வேண்டுகோள்!

தமிழக மீனவர்கள் இன்னலகள் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்... மேலும் பார்க்க

சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் பார்க்க