செய்திகள் :

மதுரையில் கூடிய தொண்டர்கள்: தவெக கட்சியினர் மீது வழக்குப்பதிவு!

post image

தவெக தலைவர் விஜய் வந்தபோது மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தவெக தலைவர் விஜய், 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் செல்வதற்காக கடந்த மே 1 ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார்.

அன்று மாலைதான் விஜய், விமான நிலையம் வந்த நிலையில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். படப்பிடிப்புக்குச் செல்வதால் கட்சி சார்பில் யாரும் வரவேண்டாம் என்றும் விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் வந்தபின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விஜய், 'நான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன், எல்லோரும் வீட்டுக்குச் செல்லுங்கள்' என்றும் கூறியிருந்தார்.

அன்று தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, விமான நிலையத்திற்குள்ளும் பயணிகள் செல்ல சிரமம் இருந்தது. விமான நிலையத்தில் தடுப்புக் கம்பிகள் உள்ளிட்டவை சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக விமான நிலையத்தில் தொண்டர்கள் கூடியதற்கு மதுரை மாவட்டச் செயலாளர்கள் தங்கபாண்டி மற்றும் கல்லணை ஆகியோர் மீது பயணிகளுக்கு தொந்தரவு செய்தல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல், சட்ட விரோதமாக கூடியது என 3 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜய் படப்பிடிப்பு முடிந்து இன்று மதுரை வழியாக சென்னை செல்லவுள்ளார். இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் தொண்டர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தாலியை கழற்றிவிட்டு நீட் தேர்வு எழுதச் சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்: அமைச்சர்

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க

ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!

பயணங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ள ரயில்வே, ஹந்தியில்தான் கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே, பயணங்கள் தொடர்பான ஒரு கட்டுரைப் போ... மேலும் பார்க்க

திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் நேற்று(மே 4) இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.தஞ்சை மாவட்டம் திருவையாறு கடுவெளி ஆச்சனூர், கோனேரிராஜபுரம், தில்லை ஸ... மேலும் பார்க்க

5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை! நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர்!

மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் 'தமிழ் வார விழா'வாகக் கொண்டாடப்பட்டது. ... மேலும் பார்க்க

வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜான்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தற்போது வரவிருக்கும் நாள்கள் எப்படியிருக்கும் என்... மேலும் பார்க்க

11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தமையம் வெளியிட்ட தகவலில், தென்தமிழகம் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க