செய்திகள் :

ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!

post image

பயணங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ள ரயில்வே, ஹந்தியில்தான் கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே, பயணங்கள் தொடர்பான ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ. 8,000, மூன்றாம் பரிசு ரூ. 6,000 ஆறுதல் பரிசு 5 பேருக்கு தலா ரூ. 4,000 மற்றும் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்.

இந்த போட்டி விதிமுறைகளில், பயணக் கட்டுரை ஹிந்தியில் மட்டுமே 3,000 முதல் 3,500 வரையிலான வார்த்தைகள் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ள ரயில்வே, கட்டுரையை ஹிந்தியில்தான் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் போட்டி விதிமுறைகளை மாற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?

இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில்தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை.

இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே.

ரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று!" என்று பதிவிட்டுள்ளார்.

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க

திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் நேற்று(மே 4) இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.தஞ்சை மாவட்டம் திருவையாறு கடுவெளி ஆச்சனூர், கோனேரிராஜபுரம், தில்லை ஸ... மேலும் பார்க்க