செய்திகள் :

`தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்' ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர் தப்பிக்க ஆற்றில் குதித்து மரணம்

post image

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இம்தியாஸ் அகமது மக்ரே, தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், கடந்த சனிக்கிழமை மக்ரேவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு தான் உதவியதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

மேலும், அந்த இடத்தை காண்பிப்பதாகவும் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இம்தியாஸ் அகமது மக்ரே வீடியோ காட்சியில் ஒரு புகைப்படம்
இம்தியாஸ் அகமது மக்ரே வீடியோ காட்சியில் ஒரு புகைப்படம்

இதனையடுத்து, நேற்று காலை, மக்ரே, காவல்துறையினர் மற்றும் ராணுவப் படையினருடன் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைக் காட்டுவதற்காக காட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால், அவர் நீந்த முயற்சித்தும், நீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதனால், அந்த ஆற்றில் மூழ்கி மக்ரே உயிரிழந்தார்.

'பாதுகாப்புப் படையினர் அவரை ஏதோ செய்துவிட்டனர்' என்று காஷ்மீரில் சில குரல்கள் எழுந்த நிலையில், மக்ரே ஆற்றில் குதித்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், மக்ரே தானாகவே ஆற்றில் குதிப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும், அவர் குதிக்கும்போது, காவல்துறையினர் அல்லது பாதுகாப்புப் படையினர் யாரும் அவருக்கு அருகில் இல்லை என்பது தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினர், "இது தொடர்பாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.

காஷ்மீர்

இந்த சம்பவத்துக்கு முன்னர், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, "குல்காம் ஆற்றில் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மோசமான செயலுக்கான கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது. இம்தியாஸ் மக்ரேவை பாதுகாப்புப் படையினர் இரண்டு நாள்களுக்கு முன்பு அழைத்துச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அதனையடுத்து, இன்று அவரது உடல் ஆற்றில் மிதந்து வந்தது" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவிலங்கு வேட்டை

மரக்கடத்தல் முதல் வனவிலங்கு வேட்டை வரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனக்குற்றங்கள் அதிகரித்து வரும் நீலகிரியில் கேரள வேட்டை கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காட்டு மாடு ... மேலும் பார்க்க

``பழைய 5 ரூபாய் நோட்டுக்கு ஒரு கோடி..'' ஆசைகாட்டி துப்புரவு தொழிலாளியிடம் ரூ.18 லட்சம் மோசடி

மோசடிகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. மும்பையில் `பழைய 5 ரூபாயை கொடுத்தால் ஒரு கோடி கொடுப்போம்' என்று கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு சமூக வலைத... மேலும் பார்க்க

மும்பை: `கார் சதுரங்க வேட்டை' 1375 பேரிடம் ரூ.20 கோடி மோசடி செய்த கும்பல்.. 246 வாகனங்கள் மீட்பு

மும்பையில் நடந்த வாடகை கார் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்த பாவேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து மிகப்... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை; காவலர் மீது வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வந்தவர், திடீரென ... மேலும் பார்க்க

சென்னை: ஆபாச பதிவு.. பெண்ணுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த நீச்சல் பயிற்சியாளர் கைது

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் பாலாஜி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நாங்... மேலும் பார்க்க

துபாய் டிராவல்ஸ் அதிபருக்கு கோவையில் ஸ்கெட்ச் - குடும்பத்தோடு சிக்கிய காதலி; பகீர் பின்னணி

திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சிகாமணி (47). சிகாமணிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதனிடையே சிகாமணி கடந்த ஏப்ரல் மாதம் கடைசிய... மேலும் பார்க்க